விருதுநகர்: ஊரடங்கு உத்தரவால் பங்குனி திருவிழா ரத்தானதையடுத்து, தனியாக தீச்சட்டி ஏந்தி பெண் நேர்த்திக்கடன் செலுத்திய சம்பவம் விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தியது.விருதுநகர் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா தென்மாவட்டத்தில் பிரசித்தி பெற்றது. இக்கோயிலில் பங்குனி பொங்கல் திருவிழா மார்ச் 15ல் சாட்டுதலுடன் துவங்கியது. ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து, திருவிழா ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து மக்கள் தங்களது வீடுகளில் விளக்கேற்றி அம்மனை வழிபடுமாறு கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டது. நேற்று முன்தினம் பங்குனி பொங்கல் மற்றும் நேற்று தீச்சட்டி திருவிழா நடப்பதாக இருந்தது. ஊரடங்கு உத்தரவால் இரண்டுமே நடைபெறவில்லை.