ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும்: மின்வாரிய தொழிற்சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை

சென்னை: மின்வாரிய தொழிற்சங்கத்தினர் கூறியதாவது:  அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ஊரடங்கு முடியும் வரை சம்பளத்துடன் கூடிய சிறப்பு விடுப்பு அளிக்கப்பட்டு வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் மின்வாரியத்தில் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே உடனடியாக தமிழக அரசு ஒப்பந்த தொழிலாளர்களின்  குடும்பங்களுக்கு  அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட சமையலுக்கு தேவையான பொருள்களையும்  நிவாரணத்  தொகையும்  வழங்க நடவடிக்கை  எடுக்க வேண்டும். 

Related Stories: