வாடிகன்: வரலாற்றில் முதல் முறையாக வாடிகனில் மக்கள் கூட்டமின்றி நேற்று குருத்தோலை ஞாயிறு அனுசரிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் தவக்காலத்தின் கடைசி வாரத்தின் முதல் ஞாயிறு குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப்படுவது வழக்கம். குருத்தோலையை பிடித்தபடி கிறிஸ்தவர்கள் பாடல் பாடிக்கொண்டு ஊர்வலமாக செல்வதும், பின்னர் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவதும் வழக்கமகிறித்தவம் பரவியிருக்கின்ற எல்லா நாடுகளிலும் குருத்து ஞாயிறு கொண்டாடப்படுகிறது. வெவ்வேறு நாடுகளில் சில சிறப்புப் பழக்கங்களும் நடைமுறையில் உள்ளன. இந்தியாவில், குறிப்பாகத் தமிழகம், கேரளம் போன்ற தென் மாநிலங்களில் தென்னங் குருத்துக்களை நேரடியாக மரத்திலிருந்து வெட்டிக் கொண்டு வருவார்கள். ஒலைகளைத் தனித்தனியாகப் பிரித்து மக்களுக்குக் கொடுப்பார்கள். பலரும் சிலுவை வடிவத்தில் ஓலைகளை மடித்துக்கொள்வார்கள். சிலர் குருவி, புறா, கிலுக்கு, மணிக்கூண்டு போன்று விதவிதமான வடிவங்களில் ஓலைகளைக் கீறிப் பின்னிக்கொள்வார்கள். குறிப்பாக, சிறுவர்கள் இதில் உற்சாகத்தோடு கலந்துகொள்வார்கள்.