டெல்லி: மாநில அரசுகள் ஊரடங்கை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சக இணைச் செயலாளர் சலீலா ஸ்ரீவஸ்தவா மாநில அரசுகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகள் விநியோகம் திருப்திகரமாக உள்ளது. 13.6 லட்சம் பணியாளர்கள் நிறுவனங்களில் தங்கவைக்கப்பட்டு உணவு வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் 75 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு உணவு வழங்கப்படுகிறது எனவும் கூறியுள்ளார்.