கொரோனாவுக்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பாரீஸ் நகரின் ரோமன்ஸ் சர் இசரே பகுதியில் உள்ள பேக்கரியில் கேக் உள்ளிட்ட உணவு பொருட்களை வாங்குவதற்காக மக்கள் வரிசையில் காத்திருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த இளைஞன் ஒருவன் தான் வைத்திருந்த கத்தியால் வரிசையில் நின்றிருந்தவர்களை திடீரென சரமாரியாக குத்தினான். இதில் இருவர் அதே இடத்தில் கொல்லப்பட்டனர். 7 பேர் காயமடைந்தனர்.