சென்னை: கொரோனா நோய்த்தொற்று குறித்த ஆலோசனையை முதியவர்களுக்கு அளிக்கும் வகையில் ஆலோசனை மையத்தை தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு:
கொரோனா வைரஸ் தாக்குதலை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. இச்சூழ்நிலையில் முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர்களின் தேவைகளை உடனுக்குடன் அறிந்து கொண்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கும் வகையில் கட்டணம் இல்லா உதவி எண்கள் அறிவிக்கப்பட்டு கடந்த 27ம் தேதியில் இருந்து செயல்பட்டு வருகிறது. எனவே, முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 18004250111 என்ற எண்ணை தங்கள் தேவைகளுக்கு தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.தமிழக அரசு அறிவிப்பு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த முதியோருக்கு ஆலோசனை மையம்
- கொரோனா விழிப்புணர்வு மையத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது
- முதியவர்கள் தமிழக அரசு முதியோருக்கான கொரோனா விழிப்புணர்வு மையத்தை அறிவிக்கிறது