திருவள்ளூர்: டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சென்று வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர் திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் நபர் என்பது குறிப்பிடத்தக்கது. வெளிநாடுகளிலிருந்து திருவள்ளூர் மாவட்டத்திற்கு வந்தவர்கள் தொடர் கண்காணிப்பில் இருக்கிறார்கள், இதுவரை திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு யாருக்கும் இல்லாத நிலையில், முதல் முறையாக டில்லி நிகழ்ச்சிக்கு சென்று வந்தவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.திருவள்ளூர் நகரின் மையப்பகுதியில் உள்ள பத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்தவர் 62வயது நபர். இவர் தப்ளிக் ஜமாஅத் கமிட்டி மாவட்ட தலைவராக உள்ளார். இவர் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சென்று வந்தார்.