மாதக் கடன் தவணை ஒத்திவைப்பு: ஏமாற்று வேலை ஆகிவிடக்கூடாது வட்டி தள்ளுபடி வழங்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:  கொரோனா வைரஸ் பரவல்  மற்றும் ஊரடங்கு காரணமாக வருவாய் இழந்தவர்களின் பொருளாதார நெருக்கடியை தற்காலிகமாக தீர்க்கும் வகையில் அனைத்து வகை கடன்களுக்கான மாதத்  தவணையை 3 மாதங்களுக்கு ஒத்திவைக்கும்  திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

ஆனால், இதில் நிவாரணம் அளிப்பதற்கு பதிலாக அபராதம் வசூலிக்க வகை செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. ஒத்திவைக்கப்பட்ட கடன் தவணைகளுக்கான தொகைக்கு, கடன் செலுத்தி முடிக்கும் காலம் முழுமைக்கும் வட்டி செலுத்தியே தீர வேண்டும் என்று அனைத்து வங்கிகளும் ஒரே அணுகுமுறையை கடைபிடிக்கின்றன.

கடன் தவணை ஒத்திவைப்பு என்பது பாதிக்கப்பட்டவர்களுக்கான சலுகை என்பதால்,  ஒத்திவைக்கப்பட்ட கடன் தவணைகளுக்கான வட்டியும் தள்ளுபடி செய்ய வேண்டும். ஆனால், கடன் செலுத்த தவறியவர்களுக்கு வங்கி அபராதம் விதிப்பதைப் போன்று கூடுதல் வட்டி செலுத்த கட்டுப்படுத்துவது வணிக அறத்திற்கு எதிரானது. எனவே, இந்த பிரச்னையில் இந்திய ரிசர்வ் வங்கி தலையிட்டு வங்கிகளுக்கு உரிய ஆணையிட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: