கீழக்கரை: கீழக்கரை அருகே உள்ள திருப்புல்லாணி ஒன்றியத்திற்குட்பட்ட தில்லையேந்தல் ஊராட்சி பகுதியில் உள்ள சின்ன பாலையரேந்தல், மோர்குளம், மருதன் தோப்பு, உள்பட 12க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.இந்நிலையில் இந்த கிராமத்தில் குடிநீர் குழாய்கள் இருந்தும் அந்த குழாய்களில் தண்ணீர் வராததால் 2 கி.மீ தூரத்தில் உள்ள கீழக்கரை துணை மின்நிலையம் அருகில் உள்ள இரண்டு குழாய்களில் வரும் தண்ணீரை இரவு, பகலாக காத்திருந்து பிடித்து வருகின்றனர்.இந்த இரண்டு குழாய்களில் வரும் தண்ணீரை தான் ஆயிரக்கணக்கான நம்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் எப்பொழுதும் கூட்டம், கூட்டமாக பெண்கள் காலி குடத்துடன் காத்துக் கிடக்கின்றனர்.இக்கிராமத்து பெண்கள் 2 கி.மீ தூரத்தில் இருந்து தண்ணீர் பிடிக்க வருகின்றனர். இதனால் இரவும், பகலுமாக குடிநீருக்காக தூக்கமின்றி காத்துக் கிடக்கிடக்கும் அவலம் நிலவுகிறது.