டெல்லி: இணையதள நாளிதழ் வயர் மீது உத்தர பிரதேச அரசு வழக்கு தொடர்ந்துள்ளதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். உண்மைத் தகவல்கள் அடங்கிய கட்டுரையை வயர் இணையதள இதழ் வெளியிட்டுள்ளது. உண்மையை வெளியிட்ட இணையதள இதழ் மீது வழக்கு தொடர்ந்து இருப்பது ஊடக சுதந்திரத்தை ஒடுக்கும் செயல் என அவர் தெரிவித்துள்ளார்.