மாமல்லபுரம்: மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவால் சுற்றுலா நகரமான மாமல்லபுரம் 8வது நாளாக மக்கள் நடமாட்டமின்றி, போக்குவரத்து இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி உள்ளன. கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி, சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் உள்ள முக்கிய சாலைகளான கிழக்கு கடற்கரை சாலை, ஓஎம்ஆர் சாலை, திருக்கழுக்குன்றம் செல்லும் சாலை உள்பட பல்வேறு சாலைகளில் வாகன போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.