டெஹ்ரான்: ஈரானில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 21 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஈரானும் ஒன்று. அங்கு 3,036 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மேலும், 47,593 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தபோதும், அதன் பரவலை கட்டுப்படுத்த முடியாமல் அரசு தவித்து வருகிறது. இந்நிலையில், அந்நாட்டில் நேற்று முன்தினம் முதல் நேற்று வரை கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் மத்திய மற்றும் தென் மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.