கொல்கத்தா : மேற்கு வங்கத்தில் கொரோனா தடுப்புப் பணியில் நேரடியாக களம் இறங்கியுள்ள அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, தமது எளிமையான அணுகுமுறையால் ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதையே தமது அன்றாட முழுநேர பணியாக மாற்றியுள்ளார். ஒவ்வொரு நாளும் காலையில் கொல்கத்தா காய்கறி சந்தைகளுக்கு செல்லும் அவர், சமூக இடைவேளியை உறுதி செய்யும் வகையில், தாமே வட்டங்களை வரைந்து மக்களுக்கு அறிவுரை வழங்கி வருகிறார்.