சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயாலளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: சமூக வாழ்வின் பெரும் சவாலாக கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவி வருவதைத் தடுக்க, தமிழ்நாடு அரசு அனைத்து முனைகளிலும் செயலாற்றி வருகிறது. ஊரடங்கால் தொழிலகங்கள், வணிக நிறுவனங்கள், சேவைத்துறைகள் என எல்லாப்பிரிவுகளும் மூடப்பட்டுள்ளன. தமிழ்நாடு முதலமைச்சர் முன்னர் 25ம் தேதி கடிதத்தில் கோரியுள்ள 4 ஆயிரம் கோடி கோரியுள்ளார். கள நிலவரத்தின் தீவிரம் அறிந்த பின்னர் 28ம் தேதி கடிதத்தில் மேலும் ரூபாய் 9 ஆயிரம் கோடி கோரியுள்ளார்.