சென்னை: கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஈஷா வளாகத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தனிமைப்படுத்தல் இடங்கள் அதிகம் தேவை என்பதால் விடுதிகள், வீடுகள் இருந்தால் உதவலாம் என சென்னை மாநகராட்சி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.