ஆம்பூர் மசூதிகளில் தங்கியிருந்த 35 பேருக்கு கொரோனா சோதனை

ஆம்பூர்:  திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள பல்வேறு மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அங்கு சுகாதாரத்துறை சார்பில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆம்பூர் கே.எம்.நகரில் உள்ள அப்ரார் மசூதிக்கு மியான்மர் நாட்டை சேர்ந்த 8 பேர் கடந்த சில தினங்களுக்கு முன் வந்தது  நேற்றுமுன்தினம்  தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மற்றும் மருத்துவக்குழுவினர் சென்று மியான்மர் நாட்டை சேர்ந்தவர்களிடம்  விசாரணை நடத்தினர்.

அவர்களுக்கு தெர்மல் கருவி மூலம் பரிசோதனை செய்தனர். இதேபோல் ஆம்பூர் அருகே உள்ள மலைமேடு மசூதியில் தங்கியிருக்கும் இந்தோனேசியாவை சேர்ந்த 12 பேருக்கும், கே.எம். நகர் மசூதிக்கு வந்த குஜராத்தை சேர்ந்த 15 பேருக்கும் மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். இதன் முடிவில் யாருக்கும் பாதிப்பில்லை என தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: