டெல்லி: பிரதமர் மோடி அறிவித்த ஊரடங்கு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடப்பட்டுள்ளது. சிறு கடைகள், ரேஷன் கடைகள், மளிகை கடைகள், காய்கனி கடைகள் செயல்படும். பெட்ரோல் நிலையங்கள், வங்கிகள், ஊடக நிறுவனங்கள் திறந்திருக்க அனுமதி. உணவு மற்றும் மருந்து பொருட்களை டெலிவரி செய்ய அனுமதி என அதில் கூறப்பட்டுள்ளது.