மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2600 புள்ளிகள் சரிந்து வாரத்தின் முதல் நாளான இன்று கடும் வீழ்ச்சியடைந்துள்ளன. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 700 புள்ளிகள் சரிந்துள்ளது. இந்திய பங்குச் சந்தைகள் 10%-க்கு மேல் சரிந்ததால் 45 நிமிடங்கள் வர்த்தகம் நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களில் 2-வது முறையாக பங்குச் சந்தையில் வர்த்தகம் நிறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிவை சந்தித்து உள்ளது. ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.46-ஐ தொட்டுள்ளது. கொரோனா வைரசால் உலக அளவில் தொழில்துறை முடங்கி கிடக்கிறது. இதனால், பங்குச்சந்தைகள் தொடர்ந்து சரிந்து வருகின்றன. கடந்த மாதம் 20ம் தேதியில் இருந்து இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து சரிந்து வருகின்றன. இதுவரை ரூ.45 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.