பரோடா: இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் அதுல் பெடடே (53), பரோடா மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்தார். கடந்த மாதம் இமாச்சல பிரதேசத்தில் நடந்த ஒரு போட்டியின் போது வீராங்கனை ஒருவரிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தல் கொடுத்துள்ளார். சில மூத்த வீரர்கள் இதுதொடர்பாக பரோடா கிரிக்கெட் சங்கத்திடம் (பிசிஏ) புகார் அளித்தனர். அதனை தொடர்ந்து, குற்றம்சாட்டப்பட்ட அதுல் பெடடே மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பாதிக்கப்பட்ட வீராங்கனையிடமும் விசாரணை நடத்தப்பட்டது. குற்றச்சாட்டு உறுதியானதால் பரோடா மகளிர் கிரிக்கெட் அணி பயிற்சியாளர் என்ற பதவியில் இருந்து அதுல் பெடரே இடைநீக்கம் செய்யப்பட்டார்.