டெல்லியில் இருந்து ஆந்திராவுக்கு ரயிலில் சென்ற 8 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி!

புதுடெல்லி: மார்ச் 13ம் தேதியன்று டெல்லியில் இருந்து ஆந்திராவுக்கு ரயிலில் சென்ற 8 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இவர்கள் 8 பேரும் சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் டெல்லியில் இருந்து தெலுங்கானா மாவட்டத்தில் ராமகுண்டம் நகருக்கு வந்துள்ளதாக மத்திய ரயில்வே துறை தகவல் தெரிவித்துள்ளது. ஏற்கனவே, மும்பையில் இருந்து ரயிலில் சென்ற 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், தற்போது மேலும் 8 பேருக்கு உறுதியாகியுள்ளது.

Related Stories: