சபரிமலை ஐயப்பன் கோயில் பங்குனி திருவிழா 29ம் தேதி துவக்கம்: பக்தர்களுக்கு அனுமதி இல்லை

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயில் பங்குனி திருவிழா வரும் 29ம் தேதி துவங்குகிறது. இதில் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. இது குறித்து கேரள  தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறியதாவது: சபரிமலை ஐயப்பன்  கோயில் பங்குனி திருவிழா வரும் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.  இதையொட்டி 28ம் தேதி மாலை கோயில் நடை திறக்கப்படும். சபரிமலை  கோயில் அமைந்துள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தில் 9 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது. இந்த காரணத்தால்  இவ்வருடம் சபரிமலை ஐயப்பன் கோயில் திருவிழாவில் ஆச்சார முறையிலான சடங்குகள்  மட்டுமே நடைபெற உள்ளது. பக்தர்களுக்கு தரிசன வசதி ஏற்படுத்தப்பட மாட்டாது.  ஏப்ரல் 7ம் தேதி பம்பையில் நடைபெற உள்ள ஆறாட்டு விழாவின் போதும்  பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: