சென்னை: சட்டப்பேரவையில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், ஜெ.அன்பழகன் எம்எல்ஏ (திமுக) ஆகியோர் கொடுத்த கவன ஈர்ப்பு மீது விவாதம் நடந்தது. அது வருமாறு: ஜெ.அன்பழகன் (திமுக): தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் தரமான வீடுகளை கட்டி வாடகைக்கு விட வேண்டும். சென்னையில் உள்ளவர்கள் குறைந்த விலையில், அதேநேரம் தரமான வீடுகளாக இருக்கும் என்றுதான் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில் வசிக்கிறார்கள். ஆனால், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான லாயிட்ஸ் காலனியில் வீடு வாடகை திடீரென 200 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அந்த குடியிருப்புகள் 1962ம் ஆண்டு கட்டப்பட்ட, பழைமையான கட்டிடம் ஆகும். ஆண்டுக்கு 5 சதவீதம் மட்டுமே வாடகை உயர்வு செய்யப்பட்டு வந்த நிலையில் 2020ம் ஆண்டு முதல் அதிக வாடகை கட்டணம் மற்றும் பராமரிப்பு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உள்ள லாயிட்ஸ் காலனி குடியிருப்பில் வாடகையை குறைக்க வேண்டும்: பேரவையில் ஜெ.அன்பழகன் எம்எல்ஏ பேச்சு
- சேப்பாக்கம்-திருவள்ளிகேனி தொகுதி
- அபார்ட்மெண்ட்
- லாயிட்ஸ் காலனி
- சேப்பாக்கம்-திருவள்ளிகேனி
- வாடகை குறைப்பு