லக்னோ: லண்டனுக்கு சென்றுவிட்டு இந்தியா திருப்பிய பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. லக்னோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவரை அனுமதித்துள்ளனர். கனிகா கபூர் லக்னோ விமான நிலையம் வந்திறங்கியதும் அதிகாரிகளின் கொரோனா சோதனையில் இருந்து எப்படி தப்பினர் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இரண்டு வாரங்கள் தனிமை படுத்தப்படுவதில் இருந்து தப்பிக்க கனிகா கபூர் ஏதோ ஒரு வழியில் தப்பியுள்ளார். தான் லண்டன் சென்று வந்ததை மறைத்து நண்பர்களுக்கு 5 ஸ்டார் ஹோட்டலில் பெரிய பார்ட்டி கொடுத்துள்ளார் கனிகா கபூர். அந்த பார்ட்டியில் முக்கிய பிரபலங்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். சுமார் 100 பிரபலங்கள் வரை அந்த பார்ட்டிக்கு வந்ததாக கூறப்படுகிறது.