மதுரை: துபாயிலிருந்து மதுரைக்கு வந்த 143 பேர் சின்ன உடைப்பு என்ற இடத்தில் உள்ள கண்காணிப்பு மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று மாலை துபாலிருந்து மதுரை வந்த 143 பயணிகளை, சின்ன உடைப்பு என்ற இடத்தில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருக்கக்கூடிய கண்காணிப்பு மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு தொடர்ந்து பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றனர். இதுவரை 2 முறை பரிசோதனை செய்யப்பட்டிருக்கக்கூடிய நிலையில், அங்குள்ள 143 பேரில் யாருக்கும் கொரோனா அறிகுறி இல்லை என்ற தகவலை சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று இரவுக்குள் அவர்கள் அனைவரும் வீடு திரும்ப இருப்பதாகவும், அதற்கு முன்னர் அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை பரிசோதனை மற்றும் கவுன்சிலிங் செய்யப்பட்டு வீட்டிற்கு அனுப்ப இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.