ஜெய்ப்பூர்: இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4ஆக இருந்த நிலையில், தற்போது அது 5 ஆக அதிகரித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இத்தாலி நாட்டை சேர்ந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 2ம் தேதி இத்தாலியை சேர்ந்த ஆண்ரி சார்லி என்ற ( 69 ) வயது முதியவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள எஸ்.எம்.எஸ். மருத்துவமனையில் கொரோனா அறிகுறியோடு அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அடிப்படையான சிகிச்சை அளித்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர், தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது அவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருடைய மனைவிக்கும் கொரோனா இருப்பதும் அவர், தற்போது தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.