சென்னை: சூளை மாரிமுத்து முதலி தெருவில் சுரேஷ் (47) என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு 11 மணிக்கு வாலிபர் ஒருவர் இந்த கடையினுள் புகுந்து கல்லாப்பெட்டியை திறந்து பணத்தை எடுத்து கொண்டு தப்ப முயன்றர். இதை பார்த்த சுரேஷ் சத்தம் போட்டு பொதுமக்கள் உதவியுடன் அந்த வாலிபரை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.