ஹாங்காங்: ஹாங்காங்கிற்கு செல்லும் அனைவரும் நாளை மறுதினம் முதல் 14 நாட்களுக்கு கட்டாயமாக தனிமைப்படுத்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹாங்காங்கில் இன்றைய நிலவரப்படி 157 பேருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டிருக்கிறது. இதில் 57 பேருக்கு புதிய கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா தொற்று ஏற்ப்பட்டவர்களில் 50 பேர் வெளிநாட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 7 பேர் மட்டுமே உள்ளூர் மக்களாவர். கொரோனா வைரஸ் காரணமாக ஹாங்காங் அரசு ஆரம்பத்தில் சுணக்கம் காட்டினாலும் தற்போது மிக மிக தீவிரமாக நோயை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டுள்ளது. உதாரணமாக ஹாங்காங்கில் உள்ள மிகப்பெரிய பள்ளிவாசல் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வருகின்ற 19ம் தேதி நள்ளிரவு முதல் அனைத்து வெளிநாட்டு பயணிகளும் கட்டாய தனிமைப்படுத்தப்பட உள்ளனர்.