காரைக்கால்: கொரோனா வைரஸ் எதிரொலி காரணமாக, காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வரபகவான் நளன் குளத்தில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குளத்தில் தண்ணீர் இறைக்கப்பட்டதால், பக்தர்கள் பாட்டில், பிளாஸ்டிக் கப்புகளில் தண்ணீரை எடுத்து தலையில் ஊற்றிக்கொண்டு செல்கின்றனர். இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதையடுத்து, காரைக்கால் மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா தலைமையில், நலவழித்துறை, பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, பக்தர்களின் நலன் கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருநள்ளாறு நளன் குளத்தில் பக்தர்கள் குளிக்க வெள்ளிக்கிழமை தடை விதித்தார். இந்நிலையில் நேற்று (14ம்தேதி) என்பதால், திருநள்ளாற்றில் வழக்கம் போல் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நேற்று முன்தினம் இரவு முதல் சுமார் 30 ஆயிரம் பக்தர்கள் கூடினர்.