அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் விரிசலால் நடுவழியில் ரயில் நிறுத்தம்

அரக்கோணம்: அரக்கோணம் அருகே நேற்று அதிகாலையில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலால் ரயில் நடு வழியில் நிறுத்தப்பட்டது. வேலூர் மாவட்டம், காட்பாடி- அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் ரயில்வே ஊழியர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் ரோந்து பணியில்  ஈடுபட்டனர். அப்போது மகேந்திரவாடி அருகே அதிகாலை 4 மணியளவில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதை கண்டனர். உடனடியாக அவ்வழியாக  ரயில்களை இயக்க வேண்டாம் என கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் மங்களூர் மெயில்  நடுவழியில் நிறுத்தப்பட்டது. ஊழியர்கள் அரை மணி நேரம் போராடி விரிசலை 4.30 மணியளவில்  சரி செய்தனர். இதையடுத்து மங்களூரு மெயில்  தாமதமாக புறப்பட்டு சென்றது.

Related Stories: