சிவகாசி: மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த அர்ஜூன் கோபால், விருதுநகர் மாவட்டம், சிவகாசி பகுதியில் தடை செய்யப்பட்ட வேதிப்பொருளான பேரியம் நைட்ரேட்டை பயன்படுத்தி, பட்டாசு உற்பத்தி செய்யப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சிவகாசியிலுள்ள பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்து 6 வாரத்தில் அறிக்கை தாக்க செய்யவேண்டும் என சி.பி.ஐ. கடந்த 3ம் தேதி உத்தரவிட்டது.இதன்படி 17 சிபிஐ அதிகாரிகள் 7 குழுக்களாக பிரிந்து, சிவகாசியில் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது தடை செய்யப்பட்ட வேதிப்பொருட்கள் (பேரியம் நைட்ரேட்) பயன்படுத்தப்படுகிறதா என ஆய்வு செய்தனர்.