திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி மாத பூஜைகளுக்காக இன்று மாலை நடை திறக்கப்படுகிறது. 18ம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும். கொரோனா வைரஸ் பீதியைத் தொடர்ந்து பக்தர்கள் வர வேண்டாம் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டும், கேரள அரசும் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்துள்ளது.