சேந்தமங்கலம்: வேறு பெண்ணுடன் குடும்பம் நடத்த முடிவு செய்ததால், கணவனை பெட்ரோல் ஊற்றி நள்ளிரவில் மனைவியே எரித்துக்கொன்றார். இதுதொடர்பாக தாய், மகளுடன் அவர் ைகது செய்யப்பட்டார்.நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை அடுத்துள்ள ஜீவா நகரை சேர்ந்தவர் கந்தசாமி (45), பில்டிங் காண்ட்ரக்டர். இவரது மனைவி அங்கம்மாள்(40). இவர்களது மகள் சாந்தி(19) ஒரு வாலிபருடன் காதல் ஏற்பட்டு, அவருடன் வீட்டை விட்டு வெளியேறியவர், கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து பெற்றோர் வீட்டுக்கே வந்து விட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அங்கம்மாளும், சாந்தியும் அருகில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்றுவிட்டனர். கந்தசாமி மட்டும் வீட்டின் வெளியே கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்தார். நள்ளிரவில் கந்தசாமி மீது யாரோ பெட்ரோலை ஊற்றி தீ வைத்து ஓடிவிட்டனர்.அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று அதிகாலை கந்தசாமி உயிரிழந்தார்.