புதுடெல்லி: மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் மேலும் 5 வேட்பாளர்களின் பெயர்களை பாஜ நேற்று வெளியிட்டது. மாநிலங்களவையில் 55 உறுப்பினர்கள் பதவி காலியாகிறது. இதனை முன்னிட்டு வருகிற 26ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாளாகும். பாஜ சார்பில் போட்டியிடும் 9 வேட்பாளர்களின் பெயர்களை பாஜ நேற்று முன்தினம் அறிவித்தது. இதனை தொடர்ந்து நேற்று மேலும் 5 வேட்பாளர்களின் பெயர்களை பாஜ வெளியிட்டது. பிற்படுத்தப்பட்டோர் அமைப்பின் தலைவர் ராமசந்திர ஜாங்ரா, துணை தலைவரும் அரியானாவை சேர்ந்தவருமான துஷ்யந்த் குமார் கவுதம், இமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த இந்து கோஸ்வாமி, மகாராஷ்டிராவை சேர்ந்த பாக்வாத் காரட், மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த சுமேர் சிங் சோலாங்கி ஆகிய ஐந்து பேரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.