திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி அடுத்த புலனேரி பகுதியை சேர்ந்த சீனு(33). இவர் எரிக்கோடி சிகே ஆசிரமம் புரிகாமனிமிட்டா பகுதியில் உறவினர் சகுந்தலாபிரபு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது சகுந்தலா சீனுவிற்கு விருந்தளிக்க தனது வீட்டில் இருந்த கோழியை தேடினார். அப்போது அந்தக் கோழி அருகே இருந்த தண்ணீர் இல்லாத 90 அடி கிணற்றில் விழுந்து இருந்தது. அந்த கோழியை மீட்க கிணற்றின் மேலே இருந்து சீனு கயிறு கட்டி கீழே இறங்கினார்.