மதுரை: மதுரை முக்தீஸ்வரர் கோயில் கருவறையில் சூரியனின் கதிர்கள் பிரவேசிக்கும் அரிய நிகழ்வு இன்று காலை நடந்தது. வரும் 23ம் தேதி வரை தினமும் காலையில் சூரியக் கதிர்கள், கருவறைக்குள் பிரவேசிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கோயிலில் இன்று காலை நடந்த சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். மதுரை தெப்பக்குளம் மேற்கு பகுதியில், உள்ள மரகதவல்லி அம்பிகை உடனுறை முக்தீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் சூரிய ஒளிக் கதிர்கள் கோயில் கருவைறக்குள் பிரவேசிக்கும். அப்போது முக்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.