வனத்துறையின் நூற்றாண்டு பழமை வாய்ந்த கட்டிடங்கள் மறுசீரமைப்பு செய்யப்படும் : வனத்துறைக்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

சென்னை : ரூ.10 கோடியில் வனத்துறையின் நூற்றாண்டு பழமை வாய்ந்த கட்டிடங்கள் மறுசீரமைப்பு செய்யப்படும் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். இன்றைய தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் வனத்துறைக்கான புதிய அறிவிப்புகளை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வெளியிட்டார்.ரூ.6 கோடியில் புலிகள் காப்பகங்களில் வேட்டைத்தடுப்பு காவலர்களுக்கான போக்குவரத்து முகாம் அமைக்கப்படும் என்றும் நாமக்கல் கொல்லிமலை, ஆகாயகங்கை நீர் வீழ்ச்சி அருகே பாரம்பரிய பல்லுயிர் பூங்கா அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related Stories: