காங்கிரஸ் கட்சியின் 7 மக்களவை உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்த உத்தரவை வாபஸ் பெற்றார் சபாநாயகர் ஓம் பிர்லா

டெல்லி :  காங்கிரஸ் கட்சியின் 7 மக்களவை உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்த உத்தரவை சபாநாயகர் ஓம் பிர்லா வாபஸ் பெற்றார். கடந்த செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோபத்துடன் சபாநாயகர் ஓம்பிர் லா இருக்கையை முற்றுகையிட்டு, சபாநாயகர் இருக்கையில் இருந்த ரமாதேவியின் கையில் வைத்திருந்த ஆவணத்தை கிழித்தெறிந்தார்கள். இதன் காரணமாக  காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த  மாணிக் தாகூர் , கவுர் கோகாய் , பிரதாபன் , தீன் சூரிய கோஸ், உண்ணிதன் உட்பட 7 மக்களவை உறுப்பினர்களை ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக கூறி இடைநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.இந்நிலையில் சபாநாயகர் ஓம்பிரலா  சபாநாயகர் தனது முடிவை திரும்ப பெற்றதால் இனி 7 பேரும் மக்களவை தொடரில் கலந்து கொள்வார்கள். காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை ஏற்று சபாநாயகர் இவர்கள் மீதான நடவடிக்கையை திரும்ப பெற்றுள்ளார்.

Related Stories: