'சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய பீகார் அரசுக்கு உள்ள துணிச்சல் தமிழக அரசுக்கு இல்லையா?': தமிமுன் அன்சாரி கேள்வி

சென்னை : யாருக்கோ பயந்து கொண்டு வாக்கு வங்கியை அதிமுக இழந்து கொண்டிருப்பதாக பேரவையில் இருந்து வெளியேறிய மஜக தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். முன்னதாக குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து சட்டப்பேரவை வளாகத்தில் தமிமுன் அன்சாரி திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக தொண்டர்கள் மனநிலையும் சிஏஏவுக்கு எதிராகவே உள்ளது என்று குறிப்பிட்டார். அத்துடன் பீகார் அரசுக்கு உள்ள துணிச்சல் தமிழக அரசுக்கு இல்லையா?என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

Related Stories: