மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் இயங்கி வரும் கிரீன் நீடா சுற்றுச் சூழல் அமைப்பு. கடந்த ஆண்டு நவம்பர் 17ம் தேதி உலக மாணவர்கள் தினத் தன்று மன்னார்குடி முதல் நீடாமங்கலம் வரை மாநில நெடுஞ்சாலையில் சுமார் 12கி.மீ தொலைவிற்கு ஆலம், ஒதியம், வாதாமடக்கி உள்ளிட்ட மரப்போத்துகளை நட்டனர். இப்பணியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். நடப்பட்டுள்ள மரப்போத்துக்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவைகள் செழி ப்பாக வளர்ந்து வருகிறது. இம் மரப்போத்துகளுக்கு ஞாயிறுதோறும் டேங்கர் லாரி மூலம் தண்ணீர் ஊற்றும் பணியில் கிரீன் நீடா சுற்றுச் சூழல் அமைப்பின் தன்னார்வ தொண்டர்கள் ஈடுப்பட்டு வருவது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.