சேலம்: கொரோனா வைரஸ் பரவலையடுத்து முக கவசம் அணிந்து பணியாற்ற ரயில்வே போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை தமிழகம் முழுவதும் ரயில்வே போலீசார் அமலுக்கு கொண்டு வந்துள்ளனர். தமிழகத்தில் ரயில்வே ஸ்டேஷன்களில் மக்கள் அதிகம் கூடுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகிறது. இதுபோக தற்போது, ரயில்வே போலீசார் அனைவரும் முக கவசம் அணிந்து தான் பணியாற்ற வேண்டும் என ரயில்வே போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை நேற்றைய தினம், மாநிலம் முழுவதும் உள்ள ரயில்வே போலீசார் அமலுக்கு கொண்டு வந்துள்ளனர்.ரயில்வே ஸ்டேஷனில் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபடும் ரயில்வே போலீசார், ஏராளமான ரயில் பயணிகளை சந்திக்க நேரிடுகிறது. அதனால், அவர்கள் தற்காப்பிற்காக முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.