மதுரா: நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாட்டங்கள் கலைகட்டியுள்ளன. வசந்தகாலத்தை வரவேற்கும் விதமாக நாடு முழுவதும் இன்று நாளையும் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஹோலி பண்டிகையை முன்னிட்டு உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் பக்தர்கள் கோவிலில் திறண்டு வழிபாடு நடத்தினர். அப்போது பக்தர்கள் மீது கலர் பொடி வீசப்பட்டது. ஹோலி பண்டிகையில் வகுப்பு மோதலை தவிர்க்கும் வகையில் அலிகாரில் மசூதி ஒன்றை தார்ப்பாய் வைத்து போலீசார் மறைத்தனர். கலர் பொடி வீசும்போது அவை மசூதியில் பட்டு கறை படாமல் இருக்கவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பீகார் மாநிலம் வைஷாலியில் ராவணன் உருவ பொம்மை எரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.