சென்னை: அபிராமபுரத்தில் தலைவலி சிகிச்சைக்காக வந்த வாலிபரை மிரட்டி ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட லண்டன் டாக்டரை போலீசார் கைது செய்தனர். சென்னை மந்தைவெளியை சேர்ந்தவர் கார்த்திக் (54). லண்டனில் மருத்துவம் பயின்று டாக்டரான இவர், ராஜா அண்ணாமலைபுரம் கிருஷ்ணய்யர் தெருவில் தனியாக கிளினிக் நடத்தி வருகிறார். கைராசியான டாக்டர் என்பதால் பலர் இவரது கிளினிக்கிற்கு செல்வது வழக்கம். இந்நிலையில், அபிராமபுரத்தை சேர்ந்த கண்ணன் (20) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கு கடுமையான தலை வலி இருந்ததால், சிகிச்சை பெற நேற்று முன்தினம் டாக்டர் கார்த்திக் கிளினிக்கிற்கு சென்றுள்ளார். அப்போது நோயாளிகள் யாரும் இல்லாததால், டாக்டர் கார்த்திக், பரிசோதனை செய்ய வேண்டும் என்று கிளினிக் பின்புறம் உள்ள அவரது அறைக்கு கண்ணனை தனியாக அழைத்து சென்றுள்ளார். அப்போது நான் சொல்லும்படி நீ செய்யவில்லை என்றால் தவறான சிகிச்சை அளித்து கொன்று விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத கண்ணன் அதிர்ச்சியடைந்தார்.