சிதம்பரம்: சிதம்பரம் அடுத்த அண்ணாமல நகரில் காவல் நிலையத்திற்கு அருகே போலீஸ் குடியிருப்பு உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த குடியிருப்பு, தற்போது பழுதடைந்து பயன்படுத்தப்படாமல் உள்ளது. இந்த குடியிருப்பில் யாரும் வசிக்கவில்லை. அண்ணாமலைநகர் காவல் நிலையத்தில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாருக்கு சிதம்பரம் நகரில் புதிய குடியிருப்புகள் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.