அண்ணாமலைநகரில் இடிந்து விழும் நிலையில் காவலர் குடியிருப்பு: இடித்து அகற்ற கோரிக்கை

சிதம்பரம்: சிதம்பரம் அடுத்த அண்ணாமல நகரில் காவல் நிலையத்திற்கு அருகே போலீஸ் குடியிருப்பு உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த குடியிருப்பு, தற்போது பழுதடைந்து பயன்படுத்தப்படாமல் உள்ளது. இந்த குடியிருப்பில் யாரும் வசிக்கவில்லை. அண்ணாமலைநகர் காவல் நிலையத்தில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாருக்கு சிதம்பரம் நகரில் புதிய குடியிருப்புகள் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் பழைய போலீஸ் குடியிருப்பின்  சுற்றுச்சுவர் மற்றும் பல்வேறு பகுதிகளில் விரிசல் ஏற்பட்டு கட்டிடம் எப்போது இடிந்து விழுமோ என்ற நிலையில் உள்ளது. காவலர் குடியிருப்பு இடிந்து விழுந்து விபத்து ஏற்படுவதற்கு முன்பு பழுதடைந்த போலீஸ் குடியிருப்பு கட்டிடத்தை இடித்து தள்ள வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: