காவேரிப்பாக்கம்: ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது ஆலப்பாக்கம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் கன்னிகாபுரம், தச்சம்பட்டறை உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் பெரும்பாலானோர் விவசாயம் மற்றும் செங்கல் சூளை தொழில் செய்து வருகின்றனர். இப்பகுதியில் சுமார் மூன்றரை ஏக்கர் பரப்பளவில் கோவிந்தன் குட்டை என்ற நீர்நிலை உள்ளது. மழைக்காலங்களில் இந்த குட்டையில் தண்ணீர் நிரம்பும்போது சுற்றுப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். மேலும் கால்நடைகளுக்கும், விவசாயிகளுக்கும் பயன்பட்டு வந்தது.