திருவலம்: திருவலம் அருகே கார் மற்றும் மினிவேனில் கடத்தி வரப்பட்ட செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பிச்சென்ற கும்பலை தேடி வருகின்றனர்.வேலூர் மாவட்டம், திருவலம் அடுத்து கண்டிப்பேடு பகுதியில் நேற்று காலை 8 மணியளவில் திருவலம் அடுத்து கண்டிப்பேடு பகுதியில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டிய கார் ஒன்று பழுதடைந்த மினி சரக்கு வேனை கட்டி இழுத்துக்கொண்டு சென்றது. இதைப்பார்த்து, சந்தேகமடைந்த போலீசார், அந்த காரை பின்தொடர்ந்து ெசன்றனர். திருவலம் அடுத்த சேர்க்காடு பகுதியில் கடைகள் உள்ள இடத்தில் நின்றது. போலீசார் தங்களை பின்தொடர்ந்து வந்ததை அறிந்த காரில் இருந்த 8 பேர் இறங்கி தப்பியோடினர். போலீசார் அவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால், அவர்கள் அங்கு முன்னால் சென்று கொண்டிருந்த மற்றோரு மினி சரக்கு வேனில் கண் இமைக்கும் நேரத்தில் ஏறி அங்கிருந்து தப்பி சென்றனர்.