டெல்லி : கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு பல்கலை மானியக் குழு (யுஜிசி) சில புதிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.சீனாவில் துவங்கி தற்போது பல்வேறு நாடுகளுக்கும் பரவி வரும் கரோனா வைரஸின் காரணமாக இதுவரை சீனாவில் 3000-த்திற்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். இந்தியாவிலும் இதுவரை 31 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பதாக அதிகாரப்பூரவமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பரவி கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, தலைநகர் டெல்லியில் ஆரம்ப பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. மேலும், மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசுஅலுவலகங்களிலும் பயோமெட்ரிக் வருகை பதிவேட்டுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.