சிவகிரி: தென்காசி மாவட்டம், சிவகிரி தென்மலை இந்திரா காலனியைச் சேர்ந்தவர் முனியப்பன் (27). ஜேசிபி டிரைவரான இவருக்கும், விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த பெண்ணுக்கும் இன்று காலை சிவகிரி, தென்மலையில் திருமணம் நடப்பதாக இருந்தது. இதற்காக முனியப்பனின் தங்கை முனீஸ்வரி, கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை மாவட்டம், பேரையூரில் இருந்துதாய் வீட்டுக்கு வந்திருந்தார். மணமகன் முனியப்பன் நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் தூங்கச் சென்றார். மற்றொரு அறையில் அவரது தாய் பஞ்சவர்ணம் (51), தங்கை முனீஸ்வரி (24) ஆகியோர் தூங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலை 2 மணியளவில் திடீரென முனியப்பனின் அறையில் இருந்து அலறல் சத்தம் கேட்டது. தங்கை முனீஸ்வரி, தாய் பஞ்சவர்ணம் ஆகியோர் ஓடிச் சென்று பார்த்தனர். அப்போது கையில் அரிவாளுடன் ஒருவர் தப்பியோடுவது தெரிந்தது. அறையில் கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் முனியப்பன் இறந்து கிடந்தரர்