பாலியல் தொல்லை அளித்ததால் மாணவன் தற்கொலை முயற்சி: மதுரையில் பள்ளி ஊழியர் கைது

மதுரை: மதுரை, தல்லாகுளம் பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் உதவியாளராக பணியாற்றி வருபவர் ஆசீர் சுதாகர்ராஜ் (45). இவர் அதே பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வரும் ஒரு மாணவனை, ஒரு மாதமாக அலுவலகத்திற்கு வரவழைத்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் கடந்த ஒரு வாரமாக மன உளைச்சலில் இருந்த மாணவன் நேற்று முன்தினம் மாணவன், அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். மயக்கமடைந்த நிலையில் இருந்த சிறுவனை மீட்டு புதூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் நடந்த விபரங்களை அவர் தாயிடம் கூறினார். இது குறித்து புகாரின்படி தல்லாகுளம் போலீசார், பள்ளி உதவியாளர் ஆசீர் சுதாகர்ராஜ் மீது சிறார்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பிரிவின் கீழ் வழக்கு பதிந்து, கைது செய்தனர்.

Related Stories: