சென்னை: பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: 2018 ஜனவரி 20ம் தேதி சென்னையில் உழவர் அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டத்தை கூட்டி, காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 18 தீர்மானங்களை பாமக நிறுவனர் நிறைவேற்றினார். அதே ஆண்டின் அக்டோபர் 27, 28, 29 ஆகிய தேதிகளில் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் தொடங்கி நாகை, தஞ்சாவூர் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகள் வழியாக சிதம்பரம் வரை காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு மற்றும் துண்டறிக்கைகளை வழங்கும் பயணத்தை மேற்கொண்டேன். மக்களவை தேர்தலுக்குப் பிறகு பிரதமரை ஒருமுறை டெல்லியில் சந்தித்தும், முதலமைச்சரை ஒருமுறை அவரது இல்லத்தில் சந்தித்தும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அமைக்க வேண்டுமென வலியுறுத்தினார்.