சென்னை: முன்னாள் எம்எல்ஏ கோவை தம்பியின் வீட்டில் புகுந்து அவரது பேரனை சரமாரியாக பிளேடால் கிழித்து கொல்ல முயன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 3வது தளத்தில் முன்னாள் எம்எல்ஏ கோவை தம்பி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் சினிமா தயாரிப்பாளராகவும் உள்ளார். இந்நிலையில் ேநற்று முன்தினம் நள்ளிரவு கோவைதம்பியின் வீட்டு கதவு தட்டும் சத்தம் கேட்டுள்ளது. வீட்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வுக்காக படித்துக் கொண்டிருந்த கோவைதம்பியின் பேரன் சச்சின் (17) கதவை திறந்துள்ளார். அப்போது திடீரென மர்ம நபர்கள் சச்சின் மீது பிளேடால் சரமாரியாக கிழித்து விட்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.